பரபரப்பு : "கவுதம் கம்பீரை காணவில்லை''..! டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

நேற்று முன்தினம் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்பாக நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டத்தில் கலந்து கொள்ள 29 எம்.பி.களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் வெறும் 4 எம்.பி.கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜக எம்.பி. மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும் கலந்து கொள்ளவில்லை.
கவுதம் கம்பீர் நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டத்தில்  கலந்து கொள்ளாமல் இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் வர்ணனையாளராக இருந்தார்.மக்கள் பிரச்சனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவது கண்டனத்திற்குரியது என பலர் விமர்சனம் செய்தனர்.
गौतम गंभीर
மேலும் கவுதம் கம்பீர்  காணவில்லை என  டெல்லியின் ஐ.டி.ஓ பகுதியில் உள்ள போஸ்டர் ஒட்டப்பட்டன.அதில் “நீங்கள் இவரைப் பார்த்தீர்களா? அவர் இந்தூரில் கடைசியாக ஜலேபி சாப்பிடுவதைக் பார்த்தோம் . டெல்லி இவரைத் தேடுகிறது” என்ற வாசகத்துடன் கவுதம் கம்பீர்  புகைப்படமும் இருந்தது.

author avatar
murugan