மேலும் நான்கு முக்கிய நகரங்களில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாராக இருக்கும் சிறப்பு விமானங்கள்.!

அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் துபாய்க்கு ஜூலை 26 வரையில் இயக்கப்படுகின்றன.

துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் விமான நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனமானது தற்போது கூடுதலாக இந்தியாவில் நான்கு நகரங்களில் இருந்து விமானங்களை துபாய்க்கு இயக்க திட்டமிட்டுள்ளது.

ஜூலை 12 முதல் ஜூலை 26 வரையில் இந்த சிறப்பு விமான சேவை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் நகரங்களை தவிர, மேலும், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் மட்டும் அனுமதிக்க விடுவதாக விமான நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தி குறிப்பில் கொச்சி, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்து இரு திசைகளிலும் அதாவது, துபாயிலிருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து துபாய்க்கும் தகுந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆனால், பெங்களூர், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் கொல்கத்தா ஆகிய நகரங்களிலிருந்து துபாய்க்கு செல்லும் சிறப்பு விமானங்களானது, இந்தியாவிலுள்ள பயணிகளை மட்டுமே ஏற்றி செல்லும் எனவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.