முகத்துவாரத்தை ஆழப்படுத்தி நிலைப்படுத்துவதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருகும் -அமைச்சர் ஜெயக்குமார்

முகத்துவாரத்தை ஆழப்படுத்தி நிலைப்படுத்துவதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருகும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைக்க, வரும் 23ஆம் தேதி மத்திய அரசு ஆய்வு நடத்துகிறது.

இந்த நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,முகத்துவாரத்தை ஆழப்படுத்தி நிலைப்படுத்துவதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருகும். தற்போது தமிழக அரசின் கோரிக்கையால் பழவேற்காடு ஏரியில் தற்காலிக தூர்வாரும் பணி நடக்கிறது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சுற்றுச்சூழல்துறை ஆய்வு நடத்த வருவது மகிழ்ச்சி  என்று தெரிவித்துள்ளார்.