4 பேரவை தொகுதிகளுக்கு  செப்டம்பர்  23-ஆம் தேதி இடைத்தேர்தல்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 4 பேரவை தொகுதிகளுக்கு  செப்டம்பர்  23-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா தொகுதிக்கும் ,கேரள மாநிலத்தில் உள்ள பாலா தொகுதிக்கும்,உத்தரபிரதேச மாநிலத்தில்  உள்ள ஹமிர்பூர் தொகுதிக்கும்,திரிபுரா மாநிலத்தில் உள்ள பதார்காட் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்றும்  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.