பயந்து அழுவதால் பலனில்லை! தைரியமாக போராடுங்கள்!

  • பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் பயந்து அழுவதால் பலனில்லை.
  • தைரியமாக பிரச்னையை எதிர்த்து போராட வேண்டும்.

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் விஷால் உடன் இணைந்து நடித்து வெளியான ஆக்ஷன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகை தமன்னா மீடூ விவகாரம் குறித்து பேசுகையில், ‘நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய மீடூ பிரச்சனையை  சந்திக்காதது என் அதிஷ்டம். மீடூ பிரச்சனை சினிமாவை தாண்டி அணைத்து துறைகளிலும் இருக்கிறது. பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் பயந்து அழுவதால் பலனில்லை. தைரியமாக பிரச்னையை எதிர்த்து போராட வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.