அதிபரை சந்தித்த டாக்டருக்கு கொரோனா-அப்போ!அதிபர்க்கு???ஆடிப்போன ரஷ்யா!!

ரஷிய அதிபர் புதினை சந்தித்த டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் ரஷ்யாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வரும் இவ்வைரஸ் 8 லட்சத்து 56 ஆயிரத்து 917 பேருக்கு பரவி உள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42 ஆயிரத்து 107 பேர் உயிரிழந்து உள்ளனர். 

வைரஸ் தாக்குதலுக்கு இரு பேரும் வல்லரசு நாடுகளும்  கடும் சவாலை சந்தித்து வருகிறது.இந்நிலையில் ரஷியாவிலும் கொரோனா மின்னல் வேகமாக பரவி 2 ஆயிரத்து 337 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மாஸ்கோவில் கொரோனா தொற்றால்  அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) அந்நாட்டு அதிபர் சென்று அங்கு பணிபுரியும்  மருத்துவர்கள் செவிலியர்கள் ,பல்வேறு மருத்துவ ஊழியர்களை சந்தித்து அதிபர்  ஆலோசனை நடத்தினர்.
 
சந்தித்தின்  போது அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டென்னிஸ் புரோட்சென்கோ உடனும் அதிபர் பேசினார். டெனிசிடம் பேசும் போது அதிபர் புதின் எந்த வித முகமூடியும் அணியாமல், கைகளை குலுக்கி  சாதாரணமாக நடந்துகொண்டார்.தற்போது
அதிபர் புதினுடன் மருத்துவமனையில் பேசிய தலைமை மருத்துவர் டென்னிஸ் புரோட்சென்கோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவர் டென்னிஸ் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அவரது நிலைமை சீராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்நிலையில் இதனால் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்ந்து மருத்துவபரிசோதனைகள் செய்துவருவதாகவும் அவர் நல்ல  உடல்நிலை இருப்பதாக கிரெம்ளின் மாளிகை செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளனர்.அதிபரை சந்தித்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
 
author avatar
kavitha