இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் தரவரிசை.! மூன்றாம் இடத்தில் தமிழகம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த எண்ணிக்கை இந்தியாவிலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் 1,637 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்து இரண்டாம் இடத்தில் கேரளாவில் 241 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அடுத்ததாக டெல்லி யில் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.