டெல்லி மாநாடு: ஆந்திராவில் 43 பேருக்கு கொரோனா உறுதி.!

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று ஊர் திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் இஸ்லாமிய மத கூட்டத்தில் கலந்து கொண்டு ஆந்திரா திரும்பிய 18 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது டெல்லி கூட்டத்தில் கலந்துகொண்டு ஆந்திரா திரும்பியவர்களில் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது (நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை) என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஆந்திராவில் கொரோனா பாதிப்பு 87 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1397 லிருந்து 1637 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 லிருந்து 38 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்