ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது- முதலமைச்சர் பழனிசாமி

மிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இன்று தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றது.இதில் சுற்றுச்சூழல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.அப்பொழுது தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பரசன்    ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பேசினார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.  

அப்பொழுது அவர் பேசுகையில் ,தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது.காவிரி டெல்டா பகுதி முழுமையாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை  என்று பதில் அளித்தார்.