செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படம்..நண்பருக்கு அனுப்பி இளைஞர் செய்த காரியம்..காவலை நாடிய காதலி

தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் ஆசை காட்டி கல்லூரி மாணவியிடம் அத்துமீறியதாகவும் இதை செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு  இளைஞர் மிரட்டி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் என்பவர் இவர் 17 வயதாகும் கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி அவருடன் தனிமையில் இருந்ததாகவும், அதனை தனது செல்போனில் ரகசியமாக புகைப்படம் எடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்மாணவி திணேஷ் உடனான தொடர்பை துண்டித்துள்ளார்.  அம்மாணவியை தொடர்ந்து அந்த புகைப்படத்தை காட்டி மிரட்டியுள்ளார் அதனோடு மட்டுமல்லாமல் ரவி என்பவருக்கும் அந்த புகைப்படத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால்
ரவி என்ற அந்த நபரும் மாணவியிடம் தவறான கண்ணோட்டத்தோடே பேச ஆரம்பித்துள்ளார். இந்நிலையில்  மாணவி தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில்  விசாரணை செய்த போலீசார் தினேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தலைமறைவாகிய ரவியை தேடி வருகின்றனர்.

author avatar
kavitha