சிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு

சிதம்பரம் தரப்பில்  சிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சிபிஐ ஆஜர்படுத்தப்பட்டார்.இதனையடுத்து  சிபிஐயின் கோரிக்கையான 5 நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சிதம்பரத்துக்கு 5 நாட்கள் காவலில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்முன் ஜாமீன் கோரி சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால் சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சிபிஐ மற்றும்  அமலாக்கத்துறைக்கு எதிராக சிதம்பரம் தரப்பில்  இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இதில் சிதம்பரம் ஏற்கனவே சிபிஐ காவலில் உள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு வருகின்ற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது .அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் வருகின்ற 26-ஆம் தேதி வரை சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம் .

இந்த நிலையில் ப.சிதம்பரம் தரப்பில்  சிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.