சென்னை பஸ்டே கொண்டாட்டம்!ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் !போலீசார் விசாரணை

சென்னை கீழ்ப்பாக்கம் புல்லா அவென்யூவில் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று தான் சென்னையில் அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னையில் கல்லூரிகளில் முதல் நாள் வகுப்பு தொடங்கியதுமே மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.  பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், சென்னை ஆவடியில் பஸ்டே கொண்டாட்டத்தில்  ஈடுபட்டனர் என்று பயணிகள் புகார் அளித்துள்ளனர்.தடை செய்யப்பட்ட பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.