சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய கோரிய வழக்கு – இன்று விசாரணை

  • உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்யக் கோரிய வழக்கு  இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, இரண்டு தினங்கள் வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை வீடியோ எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவு பிரதியை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. மேலும், வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நேற்று நடைபெற்ற விசாரணையில் ,13 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.  சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பட்டது. பின்னர் விசாரணையை இன்று ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.