BREAKING:மறைமுக தேர்தலில் வீடியோ பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு.!

  • நாளை மறுநாள்மாவட்ட ஊராட்சி தலைவர் ,ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
  • இந்த தேர்தலில் வீடியோ பதிவை செய்யவேண்டும் என திமுக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தநடந்து முடிந்தது. இந்த தேர்த்தலுக்கான முடிவுகள் கடந்த 2- ம் தேதி  எண்ணப்பட்டு அடுத்தமறுநாள் மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.அதில் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணியே அதிக இடங்களில் கைப்பற்றியது.

இந்நிலையில் நாளை மறுநாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ,ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மறைமுக தேர்தலில் வீடியோ பதிவை செய்யவேண்டும் என திமுக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளது.

இந்த மறைமுக தேர்தலில் அதிமுக முறைகேடு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக திமுக சட்டத்துறை செயலர் கிரிராஜன் கூறியுள்ளார்.இதை தொடர்ந்து இதை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் அவசர மனுவாக விசாரிக்கப்படும் என நீதிபதிபதிகள் கூறியுள்ளனர்.

 

author avatar
murugan