வங்கி கடன் மோசடி : நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு

  • வங்கி கடன் மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டு தப்பி சென்றவர்  நிரவ் மோடி.
  • நிரவ் மோடியின் காவல் 28 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் வங்கி கடன் மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டு தப்பி சென்றுவிட்டார்.இது தொடர்பாக நிரவ் மோடிக்கு  ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசார்  பிறப்பித்தனர். இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய  வாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்தது.
இந்த நிலையில் நிரவ் மோடி காவல் முடிவடைந்த நிலையில் அவர் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.அதில் அவருக்கு  ஜனவரி 2-ம் தேதி வரை காவலை நீட்டித்து  உத்தரவு பிறப்பித்தது.இதனால் அவரது காவல் மேலும் 28 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.