“புகையிலை விற்பனையை தடை செய்யுங்கள்”- மத்திய அமைச்சர்

கொரோனா மேலும் பரவாமல் இருக்க புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு, அனைத்து தனிக்கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே, புகையிலை போன்ற பொருட்கள் மூலம் பரவ வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும், புகையிலை போன்ற பொருட்கள் விற்பனையை தடை செய்யுங்கள் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்