தொலைக்காட்சி விவாதங்களில் பாஜவினர் பங்கேற்க மாட்டர்கள் – தமிழிசை தகவல்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் விவாத நிகழ்ச்சிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இனி யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடக்கும் அன்றாட அரசியல் நிகழ்வுகள் பொதுமக்களை பாதிக்கும் திட்டங்களை மையமாக கொண்டு தினமும் விவாதம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், சமீப காலங்களாக நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் சமநிலையும் மற்றும் சமவாய்ப்பும் வழங்காமல் ஒரு தரப்புக்கு சாதகமாகவே தொலைக்காட்சி நிறுவங்கள் செயல்படுவதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். எனவே,பாஜக பிரதிநிதிகள் யாரும் இனிமேல் விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டர்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.