அருண் ஜெட்லி உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி

இன்று உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த முன்னாள் மத்திய அருண் ஜெட்லி  உயிரிழந்துள்ளார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

அருண் ஜெட்லியின் மறைவிற்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த வகையில் அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில்,பாஜக மூத்த தலைவர் அத்வானி , மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் ,மத்திய அமைச்சர்  ராஜ்நாத் சிங் ,பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் நேரில்  அஞ்சலி செலுத்தினார்கள்.