அமித்ஷாவுடன் பாஜக மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையில் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையில் சந்தித்துள்ளனர்.

துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த  ஆவணப்படுத்தும் வகையில்   “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற  புத்தகம் ஓன்று வெளியிடப்படவுள்ளது.  இந்த புத்தகத்தை வெளியிட சென்னையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.

இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன்  பாஜக மேலிட பார்வையாளர் முரளிதர ராவ் முரளிதர்ராவ், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையில் சந்தித்துள்ளனர்.