தேர்தலை முன்னிட்டு அனைத்து இடங்களிலும், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணங்கள், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களும் சிக்கியுள்ளது.
இந்நிலையில், கரூர் மாவட்டம் தோகைமலை காவல் எல்லைக்கு உட்பட்ட பாதிரி பட்டியில் ராஜேந்திரன் என்பவர், அதிமுக ஊராட்சி செயலாளராக உள்ளார். இவர் நேற்று 61,150 ரூபாயை கையில் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது தேர்தல் பறக்கும் படையினர் சோதனை பணியில் ஈடுபட்டுள்ளதை கண்டவுடன் பணத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.