நஷ்டத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கோழிப்பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இதில் திமுக  சட்டமன்ற உறுப்பினர் வேலு உரையாற்றினார்.அவரது உரையில்,  கொரோனா தொற்று அச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு தீவனம் வாங்க மான்யம் வழங்க அரசு முன்வருமா? என்று தெரிவித்தார்.

இதன் பின் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.அவர் பேசுகையில், கோழிகள் மூலம் எந்தவித கொரனா வைரஸும் பரவுவதில்லை. கோழிப்பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.