இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படங்களில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், ரசிகர்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சிகளை நேரடியாக நடத்துவதிலும் ஆர்வம் கொண்டவர். இவரது இசை நிகழ்ச்சிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும்.
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நாளை சென்னையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தளபதி விஜய், இயக்குனர் அட்லீ மற்றும் பிகில் படக்குழு கலந்துகொள்ள உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நாளை உண்மையிலேயே அனைவரும் வருகிறார்களா என் பொறுத்திருந்து பார்க்கலாம்.