சாலையில் திரியும் மாடுகளுக்கு தனது மகனுடன் இணைந்து உணவளித்த பிரபல கிரிக்கெட் வீரர்!

சாலையில் திரியும் மாடுகளுக்கு தனது மகனுடன் இணைந்து உணவளித்த பிரபல கிரிக்கெட் வீரர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த 2 மாத காலமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கட்டுள்ளது.

இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையில் திரியும் விலங்குகள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான தவான், தனது மகனுடன் இணைந்து சாலையில் திரிந்த மாடுகளுக்கு உணவளித்துள்ளார். 

இதனை ஆவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, ‘ஒரு தந்தையாக எனது மகனுக்கு  மதிப்பு எது என்றும், அடுத்தவர்கள் மீது அன்பு  செலுத்துவதையும் கற்று கொடுப்பதை முக்கியமாக நினைக்கிறன்.’ என பதிவிட்டுள்ளார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.