8 கோடி ரூபாய் செலவில் முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்-அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பொருளாதார ரீதியாக நலிவுற்ற மாணவ மாணவியர்கள் டிஎன்பிஎஸ்சி, ரயில்வே மற்றும் வங்கி போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கு வசதியாக சென்னை கோவை, மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு போட்டி தேர்வுகள் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

நாகை மாவட்டம் செருதூர் ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் கிராமங்களில் 8 கோடி ரூபாய் செலவில் முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.