இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது

இன்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி உலகம் முழுவதும்  பல தேவாலயத்தில்  சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

இலங்கையில்  நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும்  தேவாலயம் என 7 இடங்களில் குண்டு வெடித்ததில் 150 -க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். மேலும் 280-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8-வது குண்டு வெடித்து. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 180 அதிகரித்தது.500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

இந்நிலையில் இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்ததாகவும். மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் தற்கொலை படையை சேர்ந்தவர்கள்.

அவர்கள் அனைவரும் ஒரே குழுவை சார்ந்தவர்கள் என  பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தன தெரிவித்தார்.

author avatar
murugan

Leave a Comment