ஹைதிராபாத் பந்து வீச்சில் திணறிய கொல்கத்தா அணி

இன்று 38-வது நடைபெறுகிறது .இப்போட்டியில் ஹைதிராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகிறது.இப்போட்டி ஹைதிராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில், டாஸ் வென்ற  ஹைதிராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணி தொடக்க வீரர்களாக  சுனில் நாரைன்,கிறிஸ் லின் இறங்கினர்.

சுனில் நாரைன் 25 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 51 ரன்களும், ரிங்க்கு சிங் 30 ரன்களும் எடுத்தனர். இறுதியாக ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் சேர்ந்தனர்.

ஹைதிராபாத் அணி பந்து வீச்சில் கே காலேல் அகமது 3 விக்கெட்டையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்.மேலும் சந்தீப் சர்மா,ரஷீத் கான்ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

ஹைதிராபாத் அணி 160 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி உள்ளது.

author avatar
murugan

Leave a Comment