6 பாடங்கள் முறை தொடரும் என்று அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும்-ராமதாஸ்

ஆறு பாடங்கள் முறை தொடரும் என்று அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

11 மற்றும் 12ம் வகுப்பு மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால் போதும் என்ற தகவல் வெளியாகி வந்தது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,ஆறு பாடங்கள் முறை தொடரும் என்று அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் .ஒற்றை மொழிப்பாட முறைக்கு மாணவர்களை தள்ளும் முறை மிகவும் ஆபத்தானது. அதுகுறித்த பரிந்துரையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment