2019 உலககோப்பை இந்தியாவிற்கே..!!ஸ்கெட்ச் போட்ட முன்னாள் அதிரடி வீரர்.!!

2019 ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெற்றிகொள்ளும் என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2019 ஆண்டுக்கான 50  ஓவர் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் வருகின்ற மே மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்த தொடக்கப் போட்டியில் முதல் போட்டியில் இங்கிலாந்து – தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடந்துகிறது. இந்நிலையில் இந்திய அணி தனது முதல் போட்யை தென்னாப்ரிக்காவுடன் எதிர்கொள்கிறது. மேலும் இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த போட்டி தொடங்க சுமார் 5 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான உலககோப்பையை எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் கணித்துள்ளார்.
அவர் கணித்த கணிப்புப்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பிடித்தமானது. ஆனால் ஒரு இந்தியராக நான் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் நான் லார்ட்ஸ் மைதானத்தில் எனது ஜெர்சியை எப்போழுதும் கழற்றப் போவதில்லை. மேலும் இந்த சவாலை கேப்டன் விராட் கோலிக்கு சவுரவ் கங்குலி அளித்துள்ளார். மேலும் 2019 உலககோப்பையை இந்தியா வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார்.
 

author avatar
kavitha

Leave a Comment