புலியை கூண்டிலே அடைக்க முடியாது..!!ஆக்ரோச நாயகனை புகழும் முன்.வீரர்..!!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக இருப்பவர் விராட் கோலி இவர் சர்வதேச கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறாா். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அங்கு நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் விராட் கோலி  தனது 25-வது டெஸ்ட் சதத்தை கிரிக்கெட் உலகிற்கு பதிவு செய்தாா். இந்த போட்டியின் மூலம் குறைந்த போட்டிகளிலேயே 25 சதங்களை அடித்து கடந்த வீரா் என்ற சாதனையை படைத்தாா்
ஆனால் ஒருபுறம் சாதனைகளை குவிந்து வருகின்ற அதே சமயத்தில் கோலிக்கு மறுபுறம் சா்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விராட் கோலி மைதானத்திலேயே எதிரணி வீரர்களுடன்  கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டார். இதில் அளவுக்கு அதிகமான மோதல் குறித்து பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
Sandeep Patil
இந்நிலையில் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சந்தீப் படேல்  விராட் கோலி ஒரு காட்டில் இருக்கும் புலியைப் போன்றவர். விராட்டை கூண்டில் அடைக்க கூடாது என்று தெரிவித்த அவர் புலியின் நகம் மற்றும் பற்களும் மூடி  இருக்கும் போது பார்க்க மென்மையான தோற்றத்தில் இருக்கும்.ஆனால் கோலியின் ஆக்ரோசத்தை ஒரு போதும் அடக்கி வைக்க முடியாது.மேலும் தனது ஆக்ரோசத்தை திசைதிருப்புவதில் வல்லவர்.இவ்வாறு தெரிவித்த அவர் நான் காட்டில் தான் புலியைப் பார்க்க வேண்டுமே தவிர கூண்டுக்குள் இல்லை என்று கூறியுள்ளார்.

author avatar
kavitha

Leave a Comment