2004 பேர் பலி.! பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 74,185ஆக உயர்வு.! புகுந்து விளையாடும் கொவிட்19.!

  • கொவிட்-19 வைரசால் சீனாவில் 136 பேர் உயிரிழந்துள்ளார்கள், நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 2004-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் புதிதாக 1,749 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் கொவிட்-19 வைரசால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் நகரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் கொவிட்-19 வைரசால் நேற்று (Tuesday) வரை சீனாவில் 136 பேர் உயிரிழந்துள்ளார்கள், நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 2004-ஆக உயர்ந்துள்ளது. அதில் 132 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இந்த வைரஸ் புதிதாக 1,749 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 1,693 பேர் ஹூபேயில் இருப்பவர்கள் என கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185-ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, ஜப்பானில், யோக்கோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 542 பேருக்கு கொவிட-19 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, ஜப்பானில், யோக்கோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் இருந்து 300 அமெரிக்கர்களை மீட்கும் பணியில் 2 வாரங்களுக்கு பிறகு அமெரிக்கா ஈடுபட்டது. இதில் 2 விமானங்கள் மூலம், டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியா விமான நிலையங்களுக்கு அமெரிக்கர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களில் 14 பேர் கலிபோர்னியாவில் தனியாக தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்