"விஜயை கண்டு பயம்" விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு.?விஜயின் தந்தை எஸ்.ஏ.சேகர் கேள்வி..!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர் என்று நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சேகர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சர்கார் பட ஆடியோ வெளியீடு விழாவில் பேசிய நடிகர் விஜய் இதற்க்கு முன்பு இல்லாத அளவுக்கு தொட்டும் தொடாமல் அரசியல் குறித்து அதிரடியாக பேசினார்.நடிகர் விஜயின் இந்த பேச்சு அவருடைய வருங்கால அரசியல் வருகையை உறுதிப்படுத்துவதாக ரசிகர்கள் என பலரும் கருத்து தெரிவித்துனர்.Image result for நடிகர் விஜய்நடிகர் விஜய் பேசிய அடுத்த நிமிடமே சமூக வலைத்தளங்களில்  வைரலாகியது மட்டுமில்லாமல் விவாத பொருளாகவும் மாறியது.அதே போல்  சிலர் நடிகர் விஜய்க்கு எதிராக கருத்துக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சபடுவதாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பாபநாசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , நடிகர் விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஒரு தமிழன் என்ற முறையில் நான் விரும்புகிறேன்.நடிகர்  விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு ..?மக்களால் உயர்த்தப்படடவர் நடிகர் விஜய்  மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் என்ன தவறு ..? நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சபடுகின்றனர் என்று நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சேகர் தெரிவித்தார்.இவரின் இந்த பேச்சு நடிகர் விஜய் அரசியலில் இறங்கி விட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
DINASUVADU 
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment