முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்தடைந்தார் மாலத்தீவு அதிபர் இப்ராகீம்….!!

மாலத்தீவு அதிபராக இப்ராகீம் முகமது சோலி கடந்த மாதம் 17-ந்தேதி பதவி ஏற்றார். அவரது பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது இந்தியா வருமாறு நரேந்திர மோடி அவருக்கு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தும் நோக்கில் 3 நாட்கள் பயணமாக முகமது சோலி இந்தியா வந்துள்ளார்.
அதிபராக பதவி ஏற்றபின் அவரது முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி விமான நிலையம் வந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர். அவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். மேலும் இன்று குடியரசு தலைவர் மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment