கொச்சி ,
கேரளாவில் கடந்த மாதம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் அந்த மாநிலமே சின்னாபின்னமாகிப் போனது. அனைவரும் வீடுகளை இழந்து உண்ண உணவு இல்லாமல் தவித்து வந்தனர்.சுமார் 8000 கோடி ரூபாய்க்கு மேல் பொருட்சேதம் ஆனதாகவும், கேரளாவுக்கு அனைவரும் உதவிக் கரம் நீட்ட வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து மத்திய அரசு, தமிழகம் உட்பட மாநில அரசுகள், பிரபலங்கள், நடிகர், நடிகையர்கள், பொதுமக்கள் என பல்வேறு பகுதியிலிருந்தும் கேரளாவுக்கு உணவு, பொருளுதவி ஆகியவை வழங்கின. இதைத்தொடர்ந்து வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.இந்நிலையில், கேரளாவுக்கு நிதியுதவி அளித்தமைக்காக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கை வெளியிட்டிருந்தார்…
அதில், இக்கட்டான சூழலில் இருந்து மக்களை காப்பாற்ற அரசாங்கத்துக்கு உதவிய தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
DINASUVADU