தொடங்கியது கொம்பு வைச்ச சிங்கத்தின் ஆட்டம்…….முட்ட விரைவில் திரைக்கு….!!!

குற்றம்-23 மற்றும் தடம் ஆகிய படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ரெதான் நிறுவனன் தான் தனது மூன்றாவது படமாக ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை தயாரிக்கிறது.ஏற்கனவே சுந்தரபாண்டியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சசிகுமாரோடு இரண்டாவது படத்தை இயக்குகிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். சுந்தரபாண்டியன் நல்ல வரவேற்பை பெற்றப்படம்.
Related image
கொம்பு வைச்ச சிங்கம்டா படமானது1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது.
Image result for கொம்பு வைச்ச சிங்கம்டா சசிகுமார்
படத்தின் ஹீரோவாக நடிகரும்,இயக்குநருமான சசிகுமார், நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் கலையரசன், சூரி, யோகிபாபு மற்றும் இயக்குனர் மகேந்திரன் மற்றும் ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமானுஜம் ,ஹரீஷ் பெராடி மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் கொம்புவச்ச சிங்கம்டா படத்தில் நடிக்கின்றனர்.
நேற்று நவம்பர் 12-ம் தேதி காரைக்குடியில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பை நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார்.படத்தின் படப்பிடிப்பு  இடைவிடாமல் ஒரே கட்டமாக பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் படபிடிப்பு நடந்து குற்றாலத்தில் வந்து நிறைவடைகின்றது.
 Image result for கொம்பு வைச்ச சிங்கம்டா சசிகுமார்
படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய,படத்திற்கு  திபு நைனன் தாமஸ் இசையில், டான் பாஸ்கோ படத்தொகுப்பில் கொம்புவச்ச சிங்கம்டா உருவாகிறது.
DINASUVADU
author avatar
kavitha

Leave a Comment