தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது! – டெல்லி அரசின் தகவலால் பரபரப்பு

  • நிர்பயா வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற இயலாது.
  • கருணை மனு நிலுவையில் இருப்பதால் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் மீண்டும் தாமதம் என டெல்லி வட்டாரத் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

Image result for nirbhaya photo

6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான்.அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

Related image

மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகின்ற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம்  நீதிமன்றம் அறிவித்தது.எனவே குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு  மனு  தாக்கல் செய்தனர்.

Image result for nirbhaya photo

இந்த மனு ஜனவரி 14-ம் தேதி விசாரிக்கப் பட்டது. ஆனால் அவர்களது  சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.எனவே அவர்களை  தூக்கிலிடப்படுவது உறுதியாகியஅடுத்து அடுத்த நடவடிக்கையில் களமிரங்கிய குற்றவாளிகள்  ஒருவரான முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை  அனுப்பி உள்ளார்.

Image result for nirbhaya photo

அந்த கருணை மனுவையும் குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டால், தான் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை மீண்டும் உறுதியாக கூடும்.

Related image

இந்நிலையில் தண்டனை நிறைவேற்ற சில தினங்களே உள்ள நிலையில் கருணை மனு நிலுவையில் இருப்பதால் நீதிமன்றம் குறிப்பிடப்பட்ட ஜனவரி 22-ம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது என்று  டெல்லி அரசு வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.

author avatar
kavitha