தகுதி என்ன..?கேட்டவருக்கு தவறு.!மீண்டும் நடக்காது..!உதயநிதி..! நெட்டிசன்கள் பாராட்டு..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும்  நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுக கட்சிக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.ஆனால் கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பும் இல்லை.

இந்நிலையில் அண்மையில் நடந்த ஒரு திமுக நிகழ்ச்சியில் பிளக்ஸ் பேனரில் கருணாநிதி ஸ்டாலின் படத்துடன் உதயநிதி படத்தையும் போட்டுள்ளதை மேற்கோள் காட்டி ஷாமுராய் என்பவர் பதிவிட்டிருந்தார்.

Image result for udya nethi stalin dmk meeting

அதில்“Mr @Udhaystalin ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா? உங்களுக்கு தோணலையா? முன்னனி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?” என்று கேட்டிருந்தார்.

இதனை போல ச.ஜெய்‏  என்பவர்  ட்விட்டர் பதிவில் “ குடும்ப அரசியல் என்ற ஒற்றை காரணத்தினாலேயே 2011 தேர்தலில் திமுக கழகம் தோற்றது,தலைவர் கலைஞருக்கு பிறகு சரியான தகுதியுள்ள தலைவராக தற்போது தளபதியை ஒட்டுமொத்த தமிழகமும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில்.மீண்டும் குடும்ப அரசியல் தொடருமானால் கழகம் மீண்டெழுவது சத்தியமாய் சாத்தியமல்ல.” என்று பதிலளித்துள்ளார்.

கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த ட்விட்டை மதித்து உதயநிதி ஸ்டாலின் பெருந்தனமையுடன் பதிலளித்துள்ளார். அவரது பதிலில் ஷாமுராய் பதிவை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “தவறு! மீண்டும் நடக்காது!” என்று பதிலளித்துள்ளார்.

Image result for udya nethi stalin

அவரின் இந்த நடவடிக்கைக்கு தொண்டர் ஒருவர் பதிவிட்டார் அதில் “நன்றி உங்கள் பதிலுக்கு திமுக சுயமரியாதை தொண்டர்கள் உள்ள கட்சி அதனால் தான் இங்கே தொண்டர்கள் தலைவரின் மகன் என்றும் பாராமல் கேள்வி கேட்கிறார்கள். நீங்களும் உங்கள் தந்தையை போல கட்சிக்காக உழைத்தால் உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.”என்றும் பதிலளித்துள்ளார்.

உதயநிதி இந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் மீது மேலும் எதிரான போக்கு நிலவும்  ஆரம்ப கட்டத்திலே உடனடியாக இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தியது அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிமாகும் என்பதை காட்டுகிறது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment