ஜப்பான் நாட்டு தூதர்..!முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் சென்னையிலுள்ள ஜப்பான் நாட்டு தூதரகத்தின் துணை தூதர் கோஜிரோ யுச்சியாமா மரியாதை நிமித்தமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார்  ஜப்பானில் டியூனா எனப்படும் சூறை மீன் பிரதான உணவாக இருப்பதால், தமிழகத்தில் பிடிக்கப்படும் சூறை மீன்களை அங்கே விற்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
இதனால் நம் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும் என்றும், வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் கலந்து கொண்டு தமிழகத்துடன் மீன் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் போட உள்ளதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
 

author avatar
kavitha

Leave a Comment