காங்கிரஸ் கட்சியின் ஒரு விசுவாசமிக்க தொண்டன் நான்… அசோக் கெலாட் பேட்டி…!!

ராஜஸ்தான் முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், சிறிய கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் இடையே முதலமைச்சர் பதவிக்கான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சராக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்த முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த முடிவு மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சருமான அசோக் கெலாட், காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு தான் கட்டுப்பட உள்ளதாகவும், தான் கட்சியின் ஒரு விசுவாசமிக்க தொண்டன் என்றும் தெரிவித்தார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment