கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் அனுசரிப்பு…!!

வ.உ.சி என்றழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளான இன்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி  வி.பி சிந்தன் படிப்பகத்தில் 14 மற்றும் 15 வது வார்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 146 வது  பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வுக்கு அழகுபாண்டியன் தலைமை தாங்கினர்.  கண்ணன் ,சேதுராமன் , பூவலிங்கம் , உலக நாதன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் MS.முத்து , மாநகரக்குழு உறுப்பினர்கள் காஸ்ட்ரோ , அருண் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இதில் சுதந்திர போராட்ட வீரரான வ.உ சிதம்பரனார் உருவ போட்டோக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர்.பின்னர் கப்பலோட்டிய தமிழன் என்று விவரிக்கப்படும் வ.உ.சிதம்பரனாரின் விடுதலை போராட்ட வரலாறு மற்றும்  தியாகம் குறித்து பேசி அனைவரும் உறுதி ஏற்றனர்..

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment