என்னையல்லாம் கூப்புடுவாங்களா….! பிரபல நடிகையின் பேச்சு…!!!

சினிமாவை விட அதிக ரசிகர்கள் உள்ளது டிவி நிகழ்ச்சிகளுக்குத்தான். அதிலும் குறிப்பாக 100 நாட்கள் ஓடும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் சென்ற வருடம் பிரபலமானது.

ஆனால் இந்த வருடம் இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதனால் தற்போது இறுதி கட்டத்தில் முதல் சீசன் போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்துள்ளனர்.

சினேகன், ஆரவ், காயத்ரி, ஆர்த்தி, வையாபுரி, சுஜா வருணி என 6 முதல் சீசன் போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில் முதல் சீசனில் பங்கேற்றிருந்த நடிகை காஜல் பசுபதி டுவிட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது ” என்னை பிக்பாஸ்ஸுக்கு வரச்சொல்லி கூப்பிடமாட்டார்கள்… நான் மகிழ்ச்சி பற்றி வெளியில் குறை சொல்லி பேசிவிட்டேன் ” என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment