எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது : சேகர் ரெட்டி அதிரடி

சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தி அதில் கட்டு கட்டாக பணம், மேலும் ஒரு டைரி கைப்பற்ற பட்டதாகவும், அந்த டைரியில் அதிமுக அமைச்சர்கள் ஓபிஎஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த விவகாரம் தொடர்பாக சேகர் ரெட்டியிடம் தொலைபேசி வாயிலாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அவர் கூஒரியதாவது, தனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. மேலும் தான் ஓபிஎஸ்-ஐ இரு முறை மட்டுமே சந்த்திதுள்ளதாகவும், கோயில்களில் சந்தித்ததாகவும் அந்த போட்டவை வைத்து அவரை துன்புறுத்துவது சரியல்ல எனவும் கூறினார். டைரி என் வீட்டிலேயே கிடையாது. அது எங்கிருந்து வந்தது என தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment