உலக அளவில், தொழில்நுட்பத் துறையில் சிறந்த 50 பெண்களில் 4 பெண்கள் இந்திய வம்சாவளி…!!

உலக அளவில் தொழில் நுட்பத் துறையில் சிறந்து விளங்கும், 50 பெண்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பேர் இடம் பிடித்துள்ளனர். நியூயார்கிலிருந்து வெளி வரும் பிரபல பத்திரிகையான, போர்ப்ஸ் உலக அளவில், தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் 50 பெண்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய வம்சவளியை சேர்ந்த 4 பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில், இந்திய வம்சாவளியான’சிஸ்கோ’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, பத்மஸ்ரீ வாரியர் (Padmasree warrior) ‘உபேர்’ நிறுவனத்தின் மூத்த இயக்குனர், கோமல் மங்டானி ( Komal Mangtani) ,’கான்ஃபுளுவென்ட்’ (Confluent) நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, நேஹா நார்க்ஹேடே,(Neha Narkhede) ‘டிராபிஜ்'(Drawbrige) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, காமாட்சி சிவராமகிருஷ்ணன் (Kamakshi sivaramakrishnan)ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment