அருண் ஜெட்லி இறப்புக்காக கறுப்பு பேட்ஜ் உடன் விளையாட உள்ள இந்திய வீரர்கள்..!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சரியில்லாததால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமான காரணத்தால்  இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறப்புக்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இன்று  இந்திய அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணி  இடையிலான மூன்றாம் நாள் டெஸ்ட் போட்டி விளையாட உள்ளார். இந்நிலையில் அருண் ஜெட்லிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கருப்பு நிற பேட்ஜ் கையில் அணிந்து இந்திய அணி வீரர்கள் விளையாட உள்ளனர்.

இறந்த அருண் ஜெட்லி பிசிசிஐ துணைத்தலைவராகவும் , டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan