அட…ச்சா…இந்த நாய்க்கு வந்த வாழ்வ பாருங்க…!!! நாயுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட கோலி-அனுஷ்கா :

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி, தனது ட்வீட்டர் பக்கத்தில் நாய் ஒன்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையையான 3வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதமடித்தபோது, அவரது மனைவி அனுஷ்கா சர்மா முத்தங்களை பறக்கவிட்டு தனத்துக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இவ்வாறு கோலி ஆடும் போட்டிகளில் அவரை அனுஷ்கா சர்மா தொடர்ந்து உற்சாகமூட்டி வருகிறார். இந்நிலையில் கோழி-அனுஷ்கா இருவரும் கடை ஒன்றுக்கு சென்றபோது, அங்கு நாய் ஒன்றுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அந்த புகைப்படத்தை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அத்துடன் ‘ எங்களுடன் புகைப்படம் எடுக்கும்போது பொறுமையாக இருந்த இந்த அழகான சிறுவனை சந்தித்தோம்னு என குறிப்பிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment