மற்ற கேப்டன்கள் யாரும் உலகக்கோப்பையைப் வெல்லக்கூடாது என்பது டோனியின் நோக்கம்-யுவராஜ் தந்தை !

நடப்பு உலகக்கோப்பை முடித்த பிறகு தோனி ஓய்வு பெறுவார் என கூறப்பட்டது.ஆனால் தோனியிடம் இருந்து எந்த வித அறிவிப்பும் இல்லாததால் அடுத்த மாதம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த போட்டிக்கான வீரர்கள் பட்டியலை நாளை வெளியிட உள்ளனர்.அந்த பட்டியலில் தோனி இடம் பெறுவாரா அப்படி இடம் பெற்றாலும் ரிஷப் பந்த் கீப்பராக செயல்படுவாரா என்ற கேள்விகள் ரசிகர்களிடம் குவித்து வருகிறது.

இந்நிலையில்  இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்  தந்தை யோகராஜ்  உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோற்றதற்கு  டோனி என  குற்றம் கூறியுள்ளார். உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோனி வேண்டும் என இலக்கை எட்ட உதவவில்லை என கூறினார்.

மேலும் தன்னைத்தவிர மற்ற கேப்டன்கள் யாரும் உலகக் கோப்பையைப் வெல்லக்கூடாது பெருமையை  என்பது டோனியின்நோக்கம் ,தோனி வேண்டுமென்று விளையாடவில்லை என கூறினார்.டோனி மீது யுவராஜ் சிங்  தந்தை யோகராஜ்  குற்றம் கூறுவது முதல் முறை அல்ல இதற்கு முன் பல முறை யுவராஜ் சிங்  தந்தை யோகராஜ் குற்றம் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan