யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்..!

கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு சாகும் வரை சிறை 3 ஆயுள் தண்டனையும், மற்ற 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் யுவராஜ் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல் குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

author avatar
murugan