பிரபாஸ்க்கு வில்லனாக நடிக்கும் பிரித்விராஜ்.!

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய ‘ராதே ஷியாம்’ இந்த வருகின்ற வெள்ளிக்கிழமை (நாளை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது இந்த திரைப்படம்.

இந்த படத்தை தொடர்ந்து கேஜிஎஃப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ் ‘சலார்’ என்ற பிரமாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ் மற்றும் மது குருசாமி ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

சமீபத்தில், கொச்சியில் நடைபெற்ற ‘ராதே ஷ்யாம்’ பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​பாகுபலி நடிகர் ஒரு தென்னிந்திய சூப்பர் ஸ்டார் தன்னுடன் சலார் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்தார்.

ஆம், சலார் படத்தில் பிரித்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். ஆம்… படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ‘சலார்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.