ஓய்வு முடிவெடுத்த யுவராஜ் அணியில் ஓரங்கட்டபட்டதுதான் காரணமா..??

இந்திய கிரிகெட் அணியில் ஆல் ரவுண்டராக கொடிகட்டி பறந்து வளம் வந்தவர் யுவராஜ் சிங்.இவர் 2017 வருடம் சரியாக போட்டியில் ஆடவில்லை என்பதால் அன்றிலிருந்து அணியில் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டார்.

Related image

இந்நிலையில் யுவராஜ் ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே தற்போது  விளையாடி வருகிறார்.அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர் புவராஜ் என்றால் அதை மறுக்க முடியாது.ஒரு பந்துக்கு 6 ரன்கள் என்று ஒரு ஒவருக்கு 6 சிக்சர்களை அடித்து பறக்க விட்டு சாதனை புரிந்தவர்.இப்படி பட்டவர் இந்திய 2011 உலகக்கோப்பையை வெல்ல உதவியாக இருந்தவர் அந்த தொடரில் அவருடைய மொத்த ரன்கள் 362 மேலும் 15 விக்கெட்டுகளை சாய்த்தவர்.

Related image

37 வயதாகும் யுவராஜ் சிங் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெற முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நிருபணம் செய்யும் வகையில்  கூறியுள்ளார். அதில் யுவராஜ் சர்வதேச மற்றும் முதல்தர போட்டியில் இருந்து ஒய்வு பெற முடிவெடுத்துள்ளார் அதனை இந்திய கிரிகெட் வாரியத்திடம் தெரிவிக்க விருப்பம் கொண்டுள்ளார். என்று தெரிவித்தார்.

Image result for YUVARAJ

கனடாவில் நடக்க உள்ள  குளோபல் லீக்  மேலும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும்  அயர்லாந்து, நெதர்லாந்தில் நடக்க உள்ள  20 ஓவர் போட்டிகளில் ஆட அவர்க்கு அழைப்பு வந்து உள்ளது.இந்த அழைப்புக்கு  கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார் என்று கூறினார்.

மேலும் கடந்த இரண்டு வருடங்களாக கிரிகெட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை மேலும் இதனால் சரியான பாமுக்கு அவரால் வர இயவில்லை இதற்கு அவர் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதே காரணம் என்று அவருடைய ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.குரசிகர்களின் குற்றச்சாட்டிற்கு உங்களுடைய கருத்துகளை பதிவிடுங்கள்

author avatar
kavitha

Leave a Comment