உங்கள் பாதுகாப்பே எனக்கு முக்கியமானது – சீமான்

கொரொனா தொற்று மீண்டும் தீவிரமடைந்திருக்கும் இந்நேரத்தில் உங்கள் பாதுகாப்பே எனக்கு முக்கியமானது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து, வரும் நிலையில், தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கொரொனா தொற்று மீண்டும் தீவிரமடைந்திருக்கும் இந்நேரத்தில் உங்கள் பாதுகாப்பே எனக்கு முக்கியமானது. முகக்கவசம், கையுறை பயன்படுத்துவதோடு, தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்குமாறும், நோய்எதிர்ப்பு ஆற்றலுக்காக கபசுர குடிநீர் வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.