நீதிமன்ற வளாகத்தில் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்…!

நீதிமன்ற வளாகத்தில் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.

கோவை  மாவட்டம், பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறிய  குதித்து, தற்கொலை  செய்து கொள்ள போவதாக பொதுமக்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

 இந்நிலையில்,சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மரத்தில் இருந்து கீழே இறங்குமாறு அந்த இளைஞரிடம் கூறினர். எனினும் அவர் கேட்காததால், மரத்தின் கீழ் வீரர்கள் வலையை விரித்தனர். அப்போது அந்த நபர் தான் வைத்திருந்த துணியை மரத்தில் கட்டி தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து, உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மரத்தில் ஏறி அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். பணப்பிரச்சனை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.